தூய்மை எய்தித் துலங்குதல் காண்பேன் ;
என் தமிழ் நாடு தன்னாட்சி பெற்றுத்
துலங்குதல் காண்பேன்:தமிழர்
நலங்காண்பேன.நான் நானிலமதிலே ''
அம்மா உம்மை , எம்மிடமிருந்து இவ்வளவு விரைந்து
இயற்கை அன்னை நிலையான ஓய்வினை
உமக்கு வழங்கி தன்னிடம் சேர்த்துக்கொண்டாள்.
இறுதி நாள்வரை எமக்காக எம் நலத்தின் பால்
உழைத்திட்ட உங்கள் அன்பு உள்ளத்தினைப்
பொறுக்காது இயற்கையோ உங்கள் அன்புள்ளம்
தமக்கே கிடைக்கவண்ணமே அழைத்துக்கொண்டாள்
ஓய்வின்றி எமக்காக முப்பொழுதும் உழைத்திட்ட அன்பு
தாயே!நீங்கள் நன்றாக ஓய்வடுங்கள்.எம் கடமைதனை
தவறாது நினவேற்றிவிட்டு எமக்கு அளித்திட்ட அன்புதனை
எமக்கு பின்வருவோரிடம் கையளித்துவிட்டு வருவோம்,
உம் அன்பொளி தொடர்ந்நு இப்பூவுலகில் சுடர்விட்டு ஒளிர.